Pages

Wednesday, April 28, 2010

பார்வை இழந்த மாணவி-புயல் வேகத்தில் உதவிய ஸ்டாலின்

சென்னை: தவறான சிகிச்சையாலும் காலாவதியான மருந்தாலும் பார்வை பறி போன மாணவியின் முழு சிகிச்சை செலவையும் துணை முதல்வர் [^] மு.க.ஸ்டாலின் [^] ஏற்றுக் கொண்டுள்ளார். கண்ணில் லென்ஸ் பொருத்த அடுத்த வாரம் அவர் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்படுகிறார்.

சென்னை திருவொற்றியூர் கிராஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்-கலாவதி தம்பதியின் மூத்த மகள் சுரேகா (12). வேன் டிரைவராக உள்ளார் தேவேந்திரன்.

கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சுரேகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டருகே உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றனர்.

அவர் சில மாத்திரைகளை எழுதித் தத்தார். அதை சாப்பிட்டும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து ரத்தம், சிறுநீர் ஆகியவை அப்போது பரிசோதிக்கப்பட்டன.

இந் நிலையில், சுரேகாவின் உடல் முழுவதும் சிறு சிறு கட்டிகள் வந்தன. வாய் பகுதி புண்ணாகியது. கண்கள் இரண்டிலும் ரத்தம் கட்டி, பார்வை மங்கத் தொடங்கியது.

இதையடுத்து அந்த டாக்டரிடமே மீண்டும் காட்டியபோது, வீரியம் அதிகமான மாத்திரை சாப்பிட்டதால் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதையடுத்து சுரேகாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனை [^]க்குக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு மாத சிகிச்சைக்குப் பி்ன் கட்டிகளும், வாய் புண்ணும் மறைந்தன. ஆனால், கண் பார்வை சீராகவில்லை. அது மேலும் மங்கியது.

இதனால், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு சுரேகாவை அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேகாவிற்கு பார்வை முழுமையாகப் பறிபோய்விட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக பல கண் மருத்துவமனைகளில் காட்டியும் சுரேகாவுக்கு பார்வை வரவில்லை. இதனால் அவரது படிப்பும் நின்றுபோய்விட்டது.

இந் நிலையில் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையிலும் சுரேகா சிகிச்சை பெற்றார். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள், சுரேகாவிற்கு கண்ணில் லென்ஸ் பொருத்தினால் பார்வை கிடைக்கும் என்று கூறினர்.

ஆனால், இந்தியாவில் இந்த லென்ஸ் கிடைக்காது என்றும், வெளிநாட்டில்தான் வாங்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக லட்சக்கணக்கில் பணம் செலவழித்துவிட்ட அந்த ஏழைக் குடும்பத்தால் இந்தச் செலவை ஏற்க முடியவில்லை.

இதனால் அரசின் உதவியை எதிர்பார்த்து நேற்று முன்தினம் மகள் சுரேகா, மனைவி கலாவதியுடன் தேவநேதிரன் சென்னை தலைமைச் செயலகம் வந்தார். அங்கு அரசு அதிகாரிகளை சந்தித்து, மகளின் சிகிச்சைக்கு உதவி கோரி மனு கொடுக்க காத்திருந்தார்.

ஆனால், சட்டசபை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதாகக் கூறி அவரை எந்த அதிகாரியும் சந்திக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டனர்.

இது குறித்து செய்தி அறிந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவி சுரேகா குறித்த விவரங்களை திரட்டிவிட்டு சங்கர நேத்ராலயா மருத்துவமனை டாக்டர்களை தொடர்பு கொண்டு சுரேகாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவரை மீண்டும் சோதிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதையடுத்து சுரேகாவை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு திமுக மகளிர் அணி புரவலர் இந்திரகுமாரி, திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அவர்கள் சுரேகாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவரை மீண்டும் பரிசோதித்த டாக்டர்கள், சுரேகாவுக்கு ஹைதராபாத்தில் உள்ள பாஸ்டோன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து லென்ஸ் பொறுத்தினால் பார்வை கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து சுகேரா குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ஸ்டாலின், சுரேகாவுக்கு கண் பார்வை கிடைக்க உலகின் எந்த மூலையில் உள்ள மருத்துவமனைக்கும் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க நான் தயார். அதற்கான முழுச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அவரே ஹைதராபாத் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசியதையடுத்து வெளிநாட்டில் இருந்து லென்ஸை வரவழைக்க அந்த மருத்துவமனை சம்மதித்தது.

அடுத்த மாதம் 3 அல்லது 4ம் தேதிகளில் ஹைதரபாத் மருத்துவமனைக்கு சுரேகா அழைத்துச் செல்லப்பட்டு லென்ஸ் சுரேகாவின் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படுவேகத்தில் ஸ்டாலின் எடுத்த இந்த நடவடிக்கைகளால் சுரேகாவும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.

நிருபர்கள் அவர்களை சந்திக்கபோது ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அவர்கள் தொடர்ந்து பேசக் கூட முடியாமல் கண்ணீர் விட்டபடி இருந்தனர்.

Tuesday, April 6, 2010

87 வயது ரசிகை சரஸ்வதி பாட்டியை சந்தித்த சச்சின்: சென்னையில் உருக்கம்!

87 வயது ரசிகை சரஸ்வதி பாட்டியை சந்தித்த சச்சின்: சென்னையில் உருக்கம்!



சென்னை: சென்னைக்கு வந்துள்ள சச்சின் டெண்டுல்கர், தனது 87 வயது ரசிக பாட்டியை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

சென்னையைச் சேர்ந்தவர் சரஸ்வதி வைத்தியநாதன். 87 வயதிலும் இந்த பாட்டிக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை ஆசை.

அதிலும் சச்சின் பேட்டிங் என்றால், சோர்ந்து படுத்திருந்தாலும் துள்ளி எழுந்து வந்து டிவி முன்பு அமர்ந்துகொள்வார்.

பார்த்து ரசித்து பொழுது போக்குவது மட்டுமல்லாமல், சச்சினுடைய கிரிக்கெட் சமாச்சாரங்கள் அத்தனையும் இந்த 'ரசிக பாட்டி'க்கு அத்துபடி.

சச்சின் முதல் விளையாட்டை எங்கு ஆடினார், குறைந்த ஸ்கோர், அதிக ஸ்கோர் என எல்லா புள்ளி விவரங்களையும் மனப்பாடமாக பதிந்து வைத்துள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்காக சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தங்கியிருந்த சச்சின், இவரைப் பற்றி பத்திரிகையில் வெளியான செய்தி மூலம் அறிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்கு வரவழைக்கப்பட்டார் 'சரஸ்வதி பாட்டி'. சச்சினை டிவியில் பார்த்து பரவசமடைந்து வந்த பாட்டிக்கு, ரத்தமும், சதையுமாக நேரில் சச்சினை பார்த்ததும் முகமெல்லாம் மலர்ந்து போய்விட்டதாம்.

'உங்களை நேரில் பார்க்க நான் கொடுத்து வச்சிருக்கணும்' என சச்சினிடம் பாட்டி சொல்ல, 'அய்யயோ நான் தான் இப்படி ஒரு ரசிகரை பெற்றதுக்கு கொடுத்து வைச்சிருக்கணும்' என புளகாங்கிதமடைந்தாராம் சச்சின்.

ரசிக பாட்டியை பார்த்த உடனடியாக முதலில் மிக பணிவுடன் காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார் சச்சின்.

பின்னர் சரஸ்வதி பாட்டியின் பிரத்தியேக ஆட்டோகிராஃப் மட்டையில் தனது கையெழுத்தை போட்டுக்கொடுத்தார்.

கண்டிப்பாக 100 சர்வதேச சதங்களை சச்சின் அடிக்க வேண்டும் எனக் கூறிய சரஸ்வதி பாட்டி, சச்சினுக்கு சின்னதாக ஒரு ஒரு பிள்ளையார் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.

சச்சினை தனது 4ம் தலைமுறை பேரனாக வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதி பாட்டி, மிகவும் இயல்பாக, 'அஞ்சலி எப்படியிருக்கா...? அர்ஜூன்... சாரா நல்லாருக்காங்களா..' என சச்சினிடம் விசாரித்தார்.

Monday, April 5, 2010

விஜய்யின் அடுத்த படம் 'காவல்காரன்'!

இந்தப் பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத் தலைப்புகளை தனுஷ் ரிசர்வ் செய்துவிட, அந்தப் பக்கம் புரட்சித் தலைவரின் படப் பெயர்களை விஜய் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

அவர் அடுத்த நடிக்கும் படத்துக்கு காவல்காரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளார். படப்பிடிப்பும் இன்று ஆரம்பித்துள்ளது.

குண்டடிபட்டு பேச முடியாமல் மருத்துவமனையிலிருந்த எம்ஜிஆர் மீண்டும் வருவாரா, படங்கள் நடிப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விரைவில் குணமடைந்து முன்னிலும் வேகத்தோடு நடித்துக் கொடுத்த படம் காவல்காரன். பெரிய ஹிட்!

இந்தத் தலைப்பைத்தான் விஜய் தனது 51வது படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே வேட்டைக்காரன் என்ற தலைப்பைப் பயன்படுத்தினார் விஜய். உரிமைக்குரல், மீனவ நண்பன், எங்கள் தங்கம் போன்ற படங்களின் பெயர்களையும் பதிவு செய்து வைத்துள்ளனர் விஜய்க்காக.

காவல்காரன் படத் தலைப்புக்காக சத்யா மூவீஸாருடன் பேசி அனுமதியும் வாங்கி விட்டனராம்.

மலையாளத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் தமிழாக்கம்தான் இந்த காவல்காரன். விஜய்க்கு இதில் ஜோடி அசின். இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.

வடிவேலு படம் முழுக்க விஜய்யுடன் வருகிறார். காரணம் அவருக்கு விஜய்யைக் கண்காணிக்கும் வேடமாம்!

ராஜ்கிரண் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கிறார். படத்தில் இவரது மகளான அசினுக்குதான் பாடிகார்டாக வருகிறார் விஜய். மீதிக் கதையும் காட்சிகளும் உங்களுக்கே தெரிகிறதல்லவா...!

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாட்டின் பட்ஜெட் தொகையை விட அதிகம்

பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.

உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.

இந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி!

இந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.

இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.

அந்த 49 பெருங்கோடீஸ்வரர்கள்...!

உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.

அம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).

இந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.

1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.

இவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.

இந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்



தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.

44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.

தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.

மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.

சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.

அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.

பெருகும் பணக்காரர்கள்...

இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.

Thursday, April 1, 2010

எந்திரன் புதிய படங்கள் (On the Sets!)

எந்திரன் புதிய படங்கள்