Pages

Tuesday, September 28, 2010

கேரளாவில் 125 தியேட்டரில் ‘எந்திரன்’ சில மணி நேரத்தில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

கேரளாவில் எந்திரன் படத்திற்கான முன்பதிவு நேற்று கோலாகலமாக தொடங்கியது. சில மணி நேரத்தில் 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்று தீர்ந்தன.


கேரளாவில் ‘எந்திரன்’ படம் 125 தியேட்டர்களில் வெளியாகிறது. இது கேரள சினிமா வரலாற்றில் புதிய சாதனை. மலையாள திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் 100 தியேட்டர்களுக்கு அதிகமாக திரையிடப்பட்டதில்லை. 

முதல் முதலாக இந்த சாதனையை எந்திரன் படைத்துள்ளது. திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய இடங்களில் எந்திரன் பட முன்பதிவு நேற்று தொடங்கியது. திருவனந்தபுரத்தில் அஞ்சலி, அதுல்யா, நியூ, தன்யா, அஜந்தா ஆகிய 5 தியேட்டர்களில் படம் வெளியாகிறது.

இந்த தியேட்டர்களில் நேற்று காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. காலை 9 மணிக்கு முன்பாகவே ரஜினி ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்தனர். முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் 5 தியேட்டர்களிலும் 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்று தீர்ந்தன. 

இதேபோல் மற்ற பகுதிகளிலும் 2 நாள் காட்சிகளுக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.அஞ்சலி, அதுல்யா தியேட்டர்களின் மேலாளர் அசோகன் கூறுகையில், ‘மலையாளத்தில் இதற்கு முன் எந்த படத்திற்கும் முன்பதிவு செய்யப்பட்டதில்லை. எந்திரன் படம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன’ என்றார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment