சண்டிகர் : ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு புதிய சீருடை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. சண்டிகரில் நேற்று நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் சச்சின், சேவக் கம்பீர், ஹர்பஜன், ஜாகீர் ஆகியோர் புதிய சீருடை அணிந்து உற்சாகமாக வலம் வந்தனர்.
இந்த சீருடையை நைகி நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் நடக்கவுள்ள ஒருநாள் தொடரில் (3 போட்டி) இந்திய வீரர்கள் புதிய சீருடையுடன் களமிறங்க உள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்ற கேப்டன் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் நேற்று காலையில்தான் சண்டிகர் வந்தனர். பயணக் களைப்பு காரணமாக சீருடை அறிமுக விழாவில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய தொடக்க வீரர் கம்பீர், ‘ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த தொடர் மிகவும் சவாலாக இருக்கும்’ என்றார்.%0D%0Aசாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடிய மைக் ஹஸி, போலிஞ்சர் இருவரும் சக ஆஸ்திரேலிய வீரர்களுடன் நேற்று இணைந்தனர்.
இந்தியா , ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நாளை தொடங்குகிறது
No comments:
Post a Comment