Pages

Wednesday, May 5, 2010

வாழ்வின் மறக்கமுடியாத பிறந்தநாள்-! த்ரிஷா



தனது பிறந்த நாளை சென்னையில் உதவும் கரங்கள் இல்ல குழந்தைகளுடன் கொண்டாடினார் நடிகை த்ரி்ஷா.

நடிகை த்ரிஷாவுக்கு மே 4-ம் தேதி பிறந்த நாள். இந்த பிறந்த நாளை மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார்.

நள்ளிரவே, வீட்டை அலங்கரித்து, பெரிய கேக் ஆர்டர் செய்து நண்பர்கள் மற்றும் தாயார் உமாவுடன் வெட்டி மகிழ்ந்தாராம். விடிந்ததும், முதல் வேலையாக உதவும் கரங்கள் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கும் போய், அங்கிருக்கும் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.

மாலை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் ஆடம்பரமான பார்ட்டிக்கு உமா கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் த்ரிஷாவுக்கு நெருக்கமான நண்பர்கள், திரையுலகப் புள்ளிகள் பங்கேற்றனர்.

பிறந்த நாள் குறித்து த்ரிஷா கூறுகையில், "வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. 400 குழந்தைகளுடன் பயனுள்ள முறையில் இந்த நாளைக் கொண்டாடினேன். அதற்கு முன்பு என் அம்மா செய்த பிறந்த நாள் விழா ஏற்பாடுகளில் ஒரு இளவரசியைப் போல உணர்ந்தேன்.

இந்தப் பிறந்த நாள் பல வகையிலும் விசேஷமானது. தொடர்ச்சியான வெற்றிகள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் எனது முதல் இந்திப் படம் வெளியாகிறது.

இதெல்லாவற்றுக்கும் மேல் கமல்ஹாஸனுடன் எனது முதல் படம் விரைவில் துவங்க உள்ளது...", என்றார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment