சென்னை: இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பார்மில் இல்லை, உடல் தகுதியுடன் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் யுவராஜ் சிங்கை அணியில் சேர்த்துள்ளனர். அதேபோல ராகுல்டிராவிடும் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சேர்க்கப்படவில்லை. இதற்குக் காரணமாக அவர் உடல் தகுதியுடன் இல்லாததையும், பார்மில் இல்லாததையும் கூறியிருந்தனர்.
இருப்பினும் இரண்டையும் மேம்படுத்திக் கொள்ள அவர் எந்த பயிற்சியையும் செய்ததாக தெரியவில்லை. ஆனால் தற்போது அவரை டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளன. முதல்டெஸ்ட் போட்டி ஜூலை 18 முதல் 22 வரை காலே நகரிலும், 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகள் முறையே ஜூலை 26-30, ஆகஸ்ட் 3-7ல் கொழும்பிலும் நடைபெறவுள்ளன.
அணி விவரம்:
டோனி, கம்பீர், ஷேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் , விருத்திமான் சாஹா, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், அமீத் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த்.
No comments:
Post a Comment