Pages

Tuesday, July 20, 2010

'ஸ்லம்டாக்'கை மிஞ்சுமா எந்திரன்?

ஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனராம்.


ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் ஆகிய பெரும் பெயர்கள் எந்திரன் படத்தில் இணைந்துள்ளன. இதற்கு உச்சமாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குக் காரணம், ஸ்லம்டாக் மில்லியனருக்கு அடித்ததை விட அட்டகாசமான இசையை இதில் ரஹ்மான் கொடுக்கவுள்ளாராம். மேலும் ஒலிப்பதிவிலும் நவீனங்களைப் புகுத்துகிறாராம் ரசூல் பூக்குட்டி. இருவரும் ஆஸ்கர்களை வாங்கிக் குவித்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

எந்திரனில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கும் வகையி்ல் ரஹ்மான் இசையமைத்துள்ளாராம். பாடலைக் கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் அதன் இசையும், ஒலிப்பதிவும் மனதை மயக்கும்வகையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டுள்ளாராம் ரஹ்மான்.

பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையிலும் பெரும் கவனம் எடுத்து வருகிறாராம் ரஹ்மான். தற்போது பின்னணி இசைச் சேர்ப்பு உள்ளிட்டவற்றில் ரஹ்மானும், பூக்குட்டியும் பிசியாக உள்ளனர்.

நன்றி : தட்ஸ்தமிழ்
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment