எந்திரனுக்கு பிரிமியர் ஷோ கிடையாது என்று திட்டவட்டமாக இருந்த சன் பிக்சர்சை போன் மேல் போன் அடித்து நாலு படி இறங்க வைத்திருக்கிறார்கள் நட்சத்திரங்கள். எங்களுக்கு தனி ஷோ உண்டா? இல்லை, தியேட்டர்ல புக் பண்ணிக்கலாமா? என்று சன் பிக்சர்சின் முக்கியஸ்தர்களுக்கு நாள் தோறும் போன் வருகிறதாம்.
செய்கிறவர்களும் முன்னணி நட்சத்திரங்கள் என்பதால் என்ன செய்வது என்று யோசித்தார்களாம். முடிவில் நட்சத்திரங்களுக்கென்று தனி ஷோ போடுவதென்று முடிவெடுத்திருக்கிறார்கள். .
என்றாலும் இந்த ஷோ ரிலீசுக்கு முதல் நாள் போடப்பட மாட்டாது என்றும், அக்டோபர் 1 ந் தேதி இரவுதான் என்றும் செய்திகள் கசிகின்றன. சத்யம் திரையரங்கில்தான் இந்த ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஸ்டார்களும் குடும்பம் குடும்பமாக வந்தால் என்ன செய்வது என்ற யோசனையும் இருப்பதால் அதே வளாகத்தில் உள்ள மேலும் சில தியேட்டர்களையும் காலியாக வைத்திருக்க உத்தரவு வந்திருக்கிறதாம்.
அடிக்கடி பார்த்த அதே ரஜினியைதான் படம் முடிகிற நேரத்திலும் நேரில் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வையும் தாண்டி, இப்பவே அந்த 1 ந் தேதிக்காக பரவசத்தோடு காத்திருக்கிறார்கள் ஹீரோக்களும் அழகு வழியும் ஹீரோயின்களும்!
No comments:
Post a Comment