Pages

Monday, September 20, 2010

எந்திரன் எதிர்பார்ப்பு

பாடலை கேட்டாச்சு, ட்ரெய்லர் பார்த்தாச்சு... படம் எப்போ சார் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. இனியும் இழுத்தடிக்கக் கூடாது என்று சன் பிக்சர்ஸ் சார்பில் அதிகாரபூர்வமாகவே நேற்று அறிவித்துவிட்டார்கள், படம் அக்டோபர் ஒன்றா‌ம் தேதி வெளியாகிறது.


பொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் முதல் நாளே தமிழ்ப் படத்தை பார்ப்பது என்பது அ‌‌ரிது. ‌சில நேரம் இங்கிலாந்து, அமெ‌‌ரிக்கா ஆகிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்.

ஆனால் எந்திரனைப் பொறுத்தவரை நீங்கள் எங்கிருந்தாலும் அக்டோபர் ஒன்றா‌ம் தேதியே படத்தைப் பார்க்கலாம். அந்தளவுக்கு பூலோகம் முழுவதும் பெட்டியை அனுப்பியிருக்கிறா‌ர்கள். தமிழ்நாடு மட்டுமின்றி உலகமெங்கும் எந்திரனுக்கு எதிர்பார்ப்பு நிலவுவதையே இது காட்டுகிறது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment