Pages

Saturday, September 25, 2010

வேட்டை மன்னன் - சீண்டும் சிம்பு

லிங்குசாமி தனது புதிய படத்துக்கு வேட்டை என்று பெயர் வைத்துள்ளார். ஆர்யா ஹீரோ.


பையா படத்துக்குப் பிறகு லிங்குசாமி சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதாகதான் இருந்தது. சிம்புவும் காத்திருந்தார். ஆனால் லிங்குசாமி விஜய்க்கு கதை சொல்வதில் கருத்தாக இருந்ததுடன், விஜய் ஓகே என்றால் அவரை வைத்து படம் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.



இது லிங்குசாமியின் படத்தில் நடிப்பதற்காக காத்திருந்த சிம்புவை கோபம் கொள்ளச் செய்தது. லிங்குசாமிக்கு எதிராக கடுமையாக பேசியவர் வானம் படத்தில் தனது கவனத்தை திருப்பினார்.

இந்த உள்ளடி வேலைகளுக்குப் பிறகுதான் ஆர்யா நடிப்பில் வேட்டை என்ற படத்தை ஆரம்பிக்க இருப்பதாக லிங்குசாமி அறிவித்தார். சிம்புவின் கோபம் இன்னும் தணியவில்லை போலும்.

வானம், போடா போடிக்குப் பிறகு வேட்டை மன்னன் என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக சிம்பு அறிவித்துள்ளார். இந்தப் படத்தை நெல்சன் என்பவர் இயக்குகிறார். பெரும்பகுதி படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த உள்ளனர்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment